பிரேசில்: பிரேசில் நாட்டில் உள்ள கடற்கரை ஓரங்களில் படிந்த பெட்ரோலிய கழிவுகளை அகற்றும் பணியில் பொதுமக்களுடன் இணைந்து ராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். பிரேசில் நாட்டில் உள்ள பெர்னம்புகோ மாநிலத்தின் சுற்றுலா தளமான போர்டோ டி கலின்ஹாஸ் பகுதியில் உள்ள கடற்கரையில் சில நாட்களாக பெட்ரோலிய கழிவுகள் கரை ஒதுங்க தொடங்கியுள்ளன. அதனை பார்த்த உள்ளூர் மக்கள் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் தங்கள் கைகளாலும், பாலித்தீன் பைகள் கொண்டும் அடர் பெட்ரோலிய கழிவுகளை அள்ளிச் சென்றனர். கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதியிலிருந்து சுமார் 600 டன்னுக்கும் அதிகமான பெட்ரோலிய கழிவுகளை அகற்றியதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.