இஸ்லாமாபாத்: சீக்கியர்களுக்குரிய புனித தலமான கர்த்தார்புர் குருதுவாரா தொடர்பான முக்கிய ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது. சீக்கிய சமயத்தை தோற்றுவித்த முதல் குருவான குருநானக் தேவின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவில் கர்த்தார்ப்புருக்கான பாதையை நவம்பர் 9ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்நிலையில் பாக்கிஸ்தானும் இதனை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங் தலைமையில் கர்தார்பூர் யாத்திரை செல்லும் முதல் குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் செல்ல உள்ளதாக உள்துறை அமைச்சக அதிகரிக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அக்குழுவினர் அன்றைய தினமே கர்தார்பூருக்கு சென்று இந்தியா திரும்புவார்கள்.