வெளிநாட்டு பணத்தை அனுமதி இன்றி பதுக்கி வைத்திருந்ததால் கல்கி சாமியாரை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு

டெல்லி: வெளிநாட்டு பணத்தை அனுமதி இன்றி பதுக்கி வைத்திருந்ததால் கல்கி சாமியாரை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. கல்கி ஆசிரமங்களில் நடத்திய சோதனையில் ரூ.20 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை வருமானவரித்துறை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டாலர்கள், பிரிட்டிஸ் பவுண்ட் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பணம் ரூ.20 கோடியில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: