புதுச்சேரியில் மதுக்கடை அடித்து உடைப்பு: போலீசார் விசாரணை

புதுச்சேரி: காரைக்கால் அருகே கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த எழிலரசிக்கு சொந்தமான மதுபான கடை அடித்து உடைக்கப்பட்டுள்ளது. வாஞ்சூரில் உள்ள மதுக்கடையில் இரவு ஹெல்மெட் அணிந்து வந்த 5 பேர் கடையை அடித்து நொறுக்கி, அரிவாளை காட்டி ஊழியர்களை மிரட்டியுள்ளனர். சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து மதுக்கடையை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: