கரூர்: போக்குவரத்து ஊழியர்களுக்கு நாளை (வியாழன்) தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் சுமார் ஒரு லட்சத்து 36 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட உள்ளது. இதற்காக ₹206.52 கோடி நிதியை முதல்வர் அனுமதித்துள்ளார். நாளை (24ம்தேதி) தீபாவளி போனஸ் வழங்கப்படும். மேலும் தீபாவளி முன்பணமாக ₹10,000 வரை வழங்கும் பணி இன்று (23ம்தேதி) முதல் தொடங்க இருக்கிறது. தீபாவளி பண்டிகையையொட்டி, சிறப்பு பேருந்துகள் இயக்க ரெகுலராக இயக்கப்படும் பேருந்து உடன் சேர்த்து 21,586 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்காக போக்குவரத்து துறை தயார் நிலையில் உள்ளது.