கோவில்பட்டி: தீபாவளியன்று திரையரங்குகளில் சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை என்றும், விதியை மீறி திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 39 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் விடுதி கட்டிடத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தீபாவளிக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. அதை மீறி சிறப்பு காட்சிகள் மற்றும் அதிக கட்டணம் வசூல் செய்தால், திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.