சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வு, முதுநிலை மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இட ஒதுக்கீடு மீண்டும் தொடர வேண்டும் என்பது உள்பட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் போராட்டத்தை அறிவித்தனர். ஆகஸ்ட் மாதம் முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்களை டாக்டர்கள் நடத்தினர். ஆனால், அரசு போராட்டத்தை கண்டுகொள்ளாத நிலையில் ஆகஸ்ட் 27ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். அப்போது ஆறு வாரத்திற்குள் டாக்டர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது. தற்போது, 8 வாரங்கள் ஆகியும் அந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை.