சென்னை: காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கட்சி தலைமைக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நலன் விரும்பிகள், கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் அதிமுக கட்சியையும், ஆட்சியையும் சீர்குலைக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறார். அவரை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் புதியதாக ஒருவரை மாவட்ட செயலாளர் பொறுப்பில் நியமிக்க வேண்டும். அப்போதுதான் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும், அதைத்தொடர்ந்து நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் நாம் வெற்றிபெற முடியும்.
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்: கட்சி தலைமைக்கு பகிரங்க எச்சரிக்கை
- சித்லபாக்கம் ராஜேந்திரன்
- காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம்
- அஇஅதிமுக
- சிட்லபாக்கம் ராஜேந்திரன்
- கட்சி
- காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம்