குலசேகரம்: குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் சிற்றாறு 1, 2 ஆகிய அணைகள் நேற்று இரவு 16 அடியை கடந்தன. இன்று காலை சிற்றாறு அணைகளுக்கு 243 கன அடி நீர்வரத்து இருந்தது. சிற்றாறு 1ல் 16.10 அடியாகவும், சிற்றாறு 2ல் 16.20 அடியாகவும் நீர்மட்டம் காணப்பட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு சிற்றாறு 1ல் இருந்து 273 கன அடி தண்ணீர் மறுகால் ஷட்டர்கள் வழியாக திறக்கப்பட்டது.