நாங்குநேரி: நாங்குநேரி இடைத்தேர்தலை போன்று அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலையும் புறக்கணிப்போம் என தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினர் அறிவித்துள்ளனர். ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக்கோரி அரசாணை வெளியிடாததை கண்டித்து பருத்திக்கோட்டை நாட்டார்கள் சங்கம் சார்பில் நாங்குநேரி இடைத்தேர்தல் புறக்கணிப்பு மற்றும் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டங்கள் நடத்தப்பட்டது. மேலும் நேற்று நடந்த இடைத்தேர்தலில் அந்த சமுதாயத்தினர் வசிக்கும் கிராமத்தில் உள்ளவர்கள் யாரும் வாக்களிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகவில்லை.
உள்ளாட்சி தேர்தலையும் புறக்கணிப்போம்: தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் அறிவிப்பு
- தேவேந்திரகுளம் ஊழியர் சங்கம் உள்ளூர் அரசாங்கத்தை புறக்கணிப்பதை அறிவிக்கிறது
- தேர்தலில்
- தேவேந்திரகுளம் ஊழியர் சங்கம் அறிவிக்கிறது