சென்னை: தெற்கு ரயில்ேவ வெளியிட்ட அறிக்கை: எழும்பூர்- மதுரை இடையே இன்று காலை 6 மணிக்கு இயக்கப்படும் ரயில் திருச்சி- மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும் மதுரை- சென்னை எழும்பூர் இடையே இன்று மாலை 3 மணிக்கு இயக்கப்படும் தேஜஸ் ரயில் மதுரை- திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும், சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.20 மணிக்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக சென்னை கடற்கரைக்கு வந்தடையும் ரயில் நாளை காட்டாங்கொளத்தூர்- அரக்கோணம் ரத்து செய்யப்படுகிறது.