×

காவல் பணியை தியாகமாக செய்கின்றனர் காவலர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: காவல் பணியை தியாகமாக செய்வதாக காவலர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:இன்னுயிர் ஈந்து நாட்டைக் காக்கும் காவலர் நினைவாக, இன்று காவலர் வீரவணக்க நாள் எனப் போற்றப்படுகிறது. காவல் பணியை வேலையாக இல்லாமல், சேவையாகக் கூடக் கருதாமல், தியாகமாய்ச் செய்துவரும் காவலர்கள்  அனைவருக்கும் தலைவணங்குகிறேன். தேசம் காக்கும் நீங்களே தேசம், வாழ்த்துகள். வணக்கங்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : MK Stalin , sacrific,congratulates ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...