பேருந்து நிலையங்கள் பராமரிப்பு குறித்து கலெக்டர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள்  சுத்தமாக இருப்பதை உறுதி செய்யக் கோரிய வழக்கில் மாவட்ட கலெக்டர்களிடம் அறிக்கை கேட்டுள்ளதாக வருவாய் நிர்வாகத் துறை முதன்மை செயலாளர் உயர் நீதிமன்றத்தில்  அறிக்கை தாக்கல் செய்துள்ளார்சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலம் மாவட்டம், கண்ணங்குறிச்சியைச் சேர்ந்த  ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள், சுகாதார கேடுடன்  உள்ளன. பேருந்து நிலையங்களை ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதால்தான் இந்த சுகாதார கேடு ஏற்படுகிறது.இந்திய அரசியல் சாசனத்தின் 21வது பிரிவு, வாழ்வுரிமையை வழங்கியுள்ளது. அதில் சுகாதாரமான சூழ்நிலையை அனுபவிப்பதும்  அடங்கும். மாநிலம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களை சுத்தமாக பராமரிக்க வலியுறுத்தி அதிகாரிகளுக்கு 2015ல் மனு அளித்தும், எந்த பதிலும் இல்லை. தெருக்களையும், பொது இடங்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என  தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டப் பிரிவுகளை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து   பதிலளிக்கும்படி, தமிழக வருவாய் துறை, உள்துறை, போக்குவரத்து துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி துறை, சுகாதார துறை செயலாளர்களுக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட்டிருந்தது.

வழக்கு ேநற்று நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக வருவாய் நிர்வாகத் துறை முதன்மை செயலாளர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.  அந்த அறிக்கையில், பேருந்து நிலையங்களை சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்யவும், அதுதொடர்பாக அறிக்கை தரவேண்டும் என்றும்  தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.  ஒவ்வொரு துறை சார்பிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் நடவடிக்கை குறித்தும் விரிவான அறிக்கையையும், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது தொடர்பான அறிக்கையையும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையையும் ஒரு வார  காலத்திற்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.அறிக்கையை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: