சென்னை: சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் பகுதியான திருவள்ளூர் மாவட்டத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, செங்குன்றம், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளன. நீர்ப்பிடிப்பு பகுதியான இங்கு அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக செம்பரம்பாக்கத்தில் 33 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக திருத்தணியில் 4 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.