புதுடெல்லி: மாமல்லபுரம் குறித்து தமிழில் கவிதை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு நடிகர் விவேக், தயாரிப்பாளர் தனஞ்செயன் பாராட்டு தெரிவித்துள்ளனர். மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மாமல்லபுரத்தின் அழகையும் கடலையும் வர்ணித்து கவிதை எழுதியிருந்தார். பிறகு தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட அந்த கவிதையை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து நடிகர் விவேக் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘இயற்கையை மதிப்பது கடவுளை மதிப்பதற்கு சமம், ஏனெனில் இயற்கை தான் கடவுள். கடல் தொடர்பான தங்களின் அன்பான கவிதைக்கு தேசத்தின் சார்பில் நன்றி’ என, பிரதமர் மோடியை டேக் செய்து விவேக் பதிவிட்டிருந்தார்.