கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற சோதனை நிறைவு: ஆசிரமத்திற்கு 4,000 ஏக்கர் நிலம் இருப்பது சோதனையில் அம்பலம்

சென்னை: கல்கி ஆசிரமத்தின் பல்வேறு கிளைகளில் 5 நாட்களாக நடைபெற்ற சோதனை நேற்று இரவோடு முடிந்தது. அதில் கல்கி ஆசிரமத்திற்கு 4,000 ஏக்கர் நிலம் இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. துபாய், ஆபிரிக்கா, பிரிட்டிஷ், வெர்ஜின் தீவுகளில் ரூ.100 கோடி அளவுக்கு முதலீடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹவாலா முறையிலும் கல்கி ஆசிரமம் பணபரிமாற்றங்களை செய்துள்ளது. கடந்த 5 நாட்கள் நடைபெற்ற சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார். கல்கி என்கிற விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா, மருமகள் ப்ரீதா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: