சென்னை: ரெட் அலர்ட் என்பது தமிழகம் முழுவதும் அல்ல என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளார்களை சந்தித்த அவர், தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவையில் நாளை மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரெட் அலர்ட் என்பது நிர்வாக ரீதியிலாக அறிவிப்பதே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.