புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ப.சிதம்பரத்தை இம்மாதம் 24ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐக்கு டெல்லி சிறப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.