சென்னை: தமிழகத்தில் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்பக்கோரி வழக்கு தொடரப்பட்டது. காரைக்குடியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.