சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற தொடர் போராட்டங்கள் விளைவாக, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள உயர் நீதிமன்ற கட்டிடத்திற்கு மட்டும் 2015 நவம்பர் 15-ல் தொடங்கிய பாதுகாப்பு ஒவ்வொரு ஆண்டாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி உடன் இந்தப் பாதுகாப்பு முடிகிறது. இந்நிலையில் இதனை நீட்டிப்பது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சரவணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வாதாடிய மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் நீதிமன்ற பாதுகாப்பை ஒவ்வொரு ஆண்டாக நீட்டிப்பதற்கு பதிலாக நிரந்தரமாக நீட்டிக்க வேண்டும்.