சென்னை: சென்னையில் 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல, குமரி, நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது. எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.