சென்னை: சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை தீர்ப்பாயத்தில் பொய்யான ஆவணங்களை காவல்துறை தாக்கல் செய்துள்ளதாக வைகோ புகார் தெரிவித்துள்ளார். மதுரையில் தீர்ப்பாயத்தில் ஆஜரான பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்ய வேண்டிய சில ஆவணங்கள் இன்னும் வராததால் தீர்ப்பாய விசாரணை அக்.30-க்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தை சேர்த்து தான் தமிழீழம் அமைக்கப்போவதாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் கூறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.