ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரியில் நள்ளிரவில் சாமி சிலைகளை மர்மநபர்கள் உடைத்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. தொப்பபாளையம் என்ற இடத்தில் பதற்றம் காரணமாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காளியண்ணன் கோவிலில் உள்ள சிலைகளை மர்மநபர்கள் உடைத்ததால் பதற்றம் நிலவி வருகிறது. சாமி சிலைகளை சேதப்படுத்திய காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.