கோவை: ரயில்வேயில் வேலை என போலி நியமன கடிதம் கொடுத்து ரூ.20 லட்சம் சுருட்டியவர் கைது செய்யப்பட்டார். கோவை வைசியாள் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). தனியார் மோட்டார் தயாரிப்பு நிறுவன தொழிலாளி. இவருடன் திருநெல்வேலி வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (43) என்பவரும் பணிபுரிந்து வந்தார். ஜெகநாதன் தனது மனைவி ரயில்வே துறையில் பணியாற்றுவதாக கூறி, பணம் கொடுத்தால் ரயில்வேயில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என தன்னுடன் பணியாற்றுபவர்களிடம் கூறி வந்துள்ளார். இதை நம்பிய ராஜேந்திரன், தனது இரு மகள், மருமகன், உறவினர் உட்பட 10 பேருக்கு வேலை வாங்கி தருமாறு ஜெகநாதனிடம் ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு, ராஜேந்திரனிடம், திருச்சி ரயில் நிலையத்தில் பணியில் சேருவதற்கான வேலை நியமன அனுமதி கடிததத்தை ஜெகநாதன் கொடுத்தார்.