கோவை: கோவையை சேர்ந்த நகை பட்டறை ஊழியரிடம் ரூ.44 லட்சம் நகைகளை கொள்ளையடித்த 2 பேர் உ.பி போலீசில் சிக்கினர். அவர்கள் கோவை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கோவை செல்வபுரம் அசோக் நகரை சேர்ந்த முரளி நரசிம்மன் (40). தங்க பட்டறை உரிமையாளர். இவரது பட்டறையில் செட்டி வீதியை சேர்ந்த முரளி (50) என்பவர் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 24ம் தேதி கர்நாடகா மாநிலம் தும்கூரில் உள்ள நகை கடைகளுக்கு 1,268 கிராம் எடை கொண்ட தங்க நெக்லஸ், தங்க காசு மாலை, தங்க வளையல் ஆகியவற்றை முரளி கொடுத்து அனுப்பினார். ரூ.44 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை தனி பேக்கில் போட்டு கொண்டு காந்திபுரத்திலிருந்து பெங்களூர் செல்ல தயாராக இருந்த தனியார் ஆம்னி பஸ்சில் ஏறினார். 25ம் தேதி அதிகாலை ஆம்னி பஸ் பெங்களூர் சென்றடைந்தது. பின்னர் தும்கூருக்கு கர்நாடக மாநில பஸ்சில் சென்று லாட்ஜில் அறை எடுத்து முரளி தங்கினார்.