கமுதி: கமுதி பகுதியில் வார்டு மறுவரையறையில் குளறுபடி உள்ளதை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் அருந்ததியர் சமுதாய மக்கள் காளியம்மன் கோயில் தெருவில் 2 ஆயிரத்திற்கும் மேல் வசிக்கின்றனர். இது 15வது வார்டு பகுதியை சேர்ந்தது. தற்போது வார்டு மறுவரையறை என்ற பெயரில் இந்த வார்டு பகுதியில் உள்ள வாக்காளர் சிலரை 13வது வார்டிலும், பலரை 14வது வார்டிலும் இணைத்துள்ளனர். ஒரே வீட்டில் கணவர் ஒரு வார்டிலும், மனைவி ஒரு வார்டிலும் இணைக்கப்பட்டனர்.