புதுடெல்லி: கடன் பாக்கி ₹466.49 கோடியை வசூலிக்க சொத்து ஏலத்தை பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. வராக்கடன் பிரச்னை காரணமாக பொதுத்துறை வங்கிகள் தள்ளாடி வருகின்றன. இந்நிலையில், புதிய விதிகளின்படி கடன் மீட்பு நிறுவனங்கள், வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு சொத்துக்களை ஏலம் விட்டு கடன் பாக்கியை வசூலிக்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.