மின்சாரம் பாய்ந்து பசுமாடு இறந்தது

திருவொற்றியூர்: மணலி அடுத்த இடப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (40). இவர், மாடுகளை வளர்த்து, பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது பசுமாடு ஒன்று, அங்குள்ள பெருமாள் கோயில் தெருவில் சென்றபோது, தேங்கியிருந்த மழைநீரில் மின் கசிவு ஏற்பட்டு இருந்ததால், அதில் சென்ற மாடு மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுபற்றி அப்பகுதி மக்கள் உடனடியாக மணலி மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஊழியர்கள், மின் இணைப்பை துண்டித்தனர்.

இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து மணலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மின்விளக்கு கம்பங்களில் வயர்கள் சரியாக பொருத்தப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் மின்கசிவு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஆண்டுதோறும் மழைக்காலத்தின்போது உயிரிழப்பு ஏற்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வராததால் தான் இதுபோன்ற நிகழ்வு நடக்கிறது’’ என்றனர்.

Related Stories: