திருவொற்றியூர்: மணலி அடுத்த இடப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (40). இவர், மாடுகளை வளர்த்து, பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது பசுமாடு ஒன்று, அங்குள்ள பெருமாள் கோயில் தெருவில் சென்றபோது, தேங்கியிருந்த மழைநீரில் மின் கசிவு ஏற்பட்டு இருந்ததால், அதில் சென்ற மாடு மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுபற்றி அப்பகுதி மக்கள் உடனடியாக மணலி மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஊழியர்கள், மின் இணைப்பை துண்டித்தனர்.