சேவல் சண்டை நடத்திய 20 பேர் கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் காமராஜர் சாலையில் உள்ள திருமண  மண்டபம் அருகில் பணம்  வைத்து சேவல் சண்டை நடத்தப்படுவதாக நேற்று  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றபோது, சுதாகர் (39) உள்ளிட்ட 20  பேர், பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவது தெரிந்து. அவர்களை  கைது செய்தனர். அவரிடமிருந்து ₹5 ஆயிரம் மற்றும் 4 சேவல்களை பறிமுதல் செய்தனர்.  வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் மாவா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்ற சீனிவாசன் என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 50 கிலோ மாவா பறிமுதல் செய்தனர்.

* கோட்டூர்புரம் மேற்கு கெனால் வங்கி சாலையை சேர்ந்த திவாகர் (27) என்பவர், கடந்த 2 நாட்களுக்கு முன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று திரும்பிய அவர், நேற்று முன்தினம் மாலை அடை    யாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

* தேனி மாவட்டம் குயிலம்பாளையத்தை சேர்ந்த சுதாகர் (35), சென்னையில் தங்கி கால்டாக்சி டிரைவராக வேலை செய்து வந்தார். இவர், கடந்த 15ம் தேதி இரவு ஜிஎஸ்டி சாலையில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார். அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த, ஓட்டேரி கொசப்பேட்டையை சேர்ந்த ஹனீப் முகமது (32) என்பவரை, மடிப்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 சவரன் செயினை பறிமுதல் செய்தனர்.

* தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் நேற்று முருகன் (46), துளசி (40) ஆகியோரது மாடுகளை பிடித்து, வேனில் கடத்த முயன்ற, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை சேர்ந்த முகமது ஹாரிப் (21), அசாருதின் (21), பாரி அகமது (21) ஆகியோரை பொதுமக்கள் மடக்கி, பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

* மண்ணடி பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து வந்த கொருக்குப்பேட்டையை சேர்ந்த மோகன் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: