திருவனந்தபுரம்: சபரிமலையில் 18ம் படிக்கு முன் பக்தர்கள் நெய் தேங்காய்களை எரிக்கும் ஆழி உள்ளது. பக்தர்கள் கொண்டுவரும் நெய் தேங்காய்களை இதில் போட்டு செல்வது வழக்கம். நடை திறக்கும் அன்று முதல் மூடப்படும் வரை ஆழி எரிந்து கொண்டிருக்கும். ஆழியில் தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதால் வெப்பம் அதிகம் இருக்கும். இதனால் அதன் அருகில் யாரும் செல்ல முடியாது.இந்த நிலையில், நேற்று முன்தினம் ஈரோட்டை சேர்ந்த தமிழரசன்(48) என்பவர் தனது மகனுடன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்திருந்தார். இரவு தரிசனம் முடித்துவிட்டு ெநய் தேங்காய் எரிக்க ஆழி அருகே சென்றார். அப்போது தவறுதலாக தன்னிடம் இருந்த ₹25 ஆயிரம் பணம், ஆதார் கார்டு உட்பட ஆவணங்கள் வைத்திருந்த பொட்டலத்தை ஆழிக்குள் வீசிவிட்டார்.