புதுடெல்லி: நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு எதிராக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை விமர்சித்துள்ள ராகுல் காந்தி, ‘10 ஆண்டுகள் முயற்சித்தாலும் இவர்களுக்கு புரியவைக்க முடியாது,’ என்று கூறியுள்ளார். பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியரான அபிஜித் பானர்ஜி, இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாக சமீபத்தில் கருத்து கூறினார். இது பற்றி புனேவில் பேட்டி அளித்த மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், ‘நோபல் பரிசுப் பெற்ற அபிஜித் பானர்ஜி, கம்யூனிஸ்ட் சார்புடையவர் போல் பேசுகிறார்,’ என்று விமர்சித்தார். கோயலின் இந்த கருத்தால், அபிஜித் பானர்ஜி கவலை அடைந்தார்.