சென்னை: துபாயில் இருந்து ஏர் இண்டியா விமானம் நேற்று காலை 5 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த சையது அப்துல் ரஹீம் (35), ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது நலீப் (24) ஆகிய இருவரும் துபாய்க்கு சுற்றுலா சென்றுவிட்டு, சென்னை திரும்பினர். அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்கள் உடமைகளை சோதனை செய்தனர்.