புதுடெல்லி: ‘‘தொழில்நுட்பம் பற்றி பயத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன’’ என புத்தக வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடி பேசினார். டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன், அதே நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் ரூபா புருஷோத்தமன் ஆகியோர் இணைந்து எழுதிய ‘பிரிட்ஜிடல் இந்தியா’ என்ற புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடந்து. இதில் தொழிலதிபர் ரத்தன் டாடா உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: தொழில்நுட்பம் பற்றி பயத்தை ஏற்படுத்தி, அச்சுறுத்தலான சூழலை ஏற்படுத்தும் முயற்சிகள் நாட்டில் நடக்கின்றன. செயற்கை நுண்ணறிவின் அபாயம் பற்றியோ அல்லது ரோபோக்கள் எப்போது மனிதனை மிஞ்சும் என்பது பற்றி விவாதம் இருக்கக் கூடாது.