ஈரோடு: நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் மத பிரச்சனையை தூண்டும் வகையில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி த.மு.மு.க.வினர் ஈரோடு எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்தனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் ஈரோடு எஸ்.பி. சக்தி கணேசனிடம் நேற்று புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது: நாங்குநேரி இடைத்தேர்தலுக்காக களக்காட்டில் பிரசாரம் செய்து கொண்டிருந்த அதிமுக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம், அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடை பிரச்னை தொடர்பாக மனு அளித்தனர்.