விஜயகாந்தை வரவேற்க சென்றவர் பலி: தந்தை உள்பட 3 பேர் படுகாயம்

சென்னை: மேல்மருவத்தூர் அடுத்த பசுவங்கரனை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்குமரன் (50). இவர் அச்சிறுப்பாக்கம் ஒன்றிய தேமுதிக முன்னாள் தலைவர். இவரது  மகன் ஜெயசூர்யா  (24), அச்சிறுப்பாக்கம் ஒன்றிய தேமுதிக மாணவரணி நிர்வாகி. இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து விக்கிரவாண்டி  தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அவருக்கு, மேல்மருவத்தூர் அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் தேமுதிகவினர் திரண்டு வரவேற்பு அளித்தனர். இதில், ஜெயசூர்யா தனது தந்தையுடன் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து விஜயகாந்த் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்து காரில் சென்று கொண்டிருந்தார்.  

தொழுப்பேடு அருகே சென்றபோது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் ஜெயசூர்யா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தந்தை படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் பயணம் செய்த மேலும் 2 தொண்டர்களும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: