சொல்லிட்டாங்க...

மாநிலங்களில் இருந்து பெறப்படும் 50 சதவீத இடங்களுக்கு, இடஒதுக்கீடு வழங்கப்படாது என்ற அறிவிப்பு சமூக நீதிக்கு சாவு மணி அடிப்பதாகும்.

- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

எடப்பாடி அரசில் கிராமம் முதல் உயர் மட்டம் வரை ஊழல் கரைபுரண்டு வெள்ளமென பெருக்கெடுத்து பாய்கிறது.

- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஓ.பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் ஆஜராகி மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு முன்வராதது ஏன்?

- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

பாஜ தலைவர்கள், அவர்களின் வேலையை செய்வதற்கு பதில், அடுத்தவர் சாதனைகளை பொய்யாக்க முயற்சிக்கின்றனர்.

- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

Related Stories: