தஞ்சை: தஞ்சை அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் இருந்து பள்ளியக்ரகாரம் வரை உள்ள சுற்றுச்சாலையில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள், காதல்ஜோடிகளை முகமூடி கொள்ளையர்கள் மிரட்டி பலாத்காரம் செய்து பணம் மற்றும் நகைளை பறித்து உள்ளனர். இது குறித்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், சந்தேகத்திற்கிடமாக டூ வீலரில் வந்த ஒருவரை மடக்கி சோதனை நடத்தியதில், திருட்டு டூ வீலர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்தபோது, முகமூடி கொள்ளை கும்பலுக்கு தலைவன் என தெரியவந்தது.