விம்கோ நகர் வரையில் இயக்கப்படும் முதல் மெட்ரோ ரயில் சென்னை வருகை

சென்னை: வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வரையில் இயக்குவதற்கான முதல் மெட்ரோ ரயில் நேற்று சென்னை வந்தடைந்தது. மெட்ரோ ரயிலை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையில் நீட்டிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 9.1 கி.மீ தூரம் வரையிலான இந்த நீட்டிப்பு பணிக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் ரூ3,770 கோடி ஒதுக்கியுள்ளது. இதேபோல், நீட்டிப்பு பணிக்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் 10 ரயில்களை ஆர்டர் செய்தது.

இதற்காக பெங்களூர் ஸ்ரீ சிட்டில் உள்ள ஆல்ஸ்டாம் ரயில்பெட்டி தயாரிப்பு நிறுவனம் ரயில்பெட்டிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இந்தநிலையில், ரயில் பெட்டி தர பரிசோதனைக்கு பிறகு வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர வரையிலான நீட்டிப்பு வழித்தடத்தில் இயக்குவதற்கான முதல் மெட்ரோ ரயில் நேற்று சென்னை கொண்டுவரப்பட்டது.

Related Stories: