நான் விடுத்த அறைகூவலை ஏற்றால் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தை காட்ட தயார்: ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: நான் விடுத்த அறைகூவலை ராமதாஸ் ஏற்றால், அவர் கேட்கும்  நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தை காட்ட தயார் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: முரசொலி அலுவலகம் தற்போது இருக்குமிடம் பஞ்சமி நிலம் எனும் பச்சைப் பொய் ஒன்றை மருத்துவர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘‘அது பஞ்சமி நிலமல்ல; பட்டா நிலம்’’ என்பதை ஆதாரத்துடன் அவருக்கு பதிலாக பதிவு கொடுத்தேன்.

“அவர் பஞ்சமி நிலம் என நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்; இதை பஞ்சமி நிலம் என அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அவர் கூறியது பச்சைப் பொய் என்பதை ஊர்ஜிதம் செய்தால் அவரும், அவரது மகன் அன்புமணியும் அரசியலை விட்டு விலகத் தயாரா’’ என அறைகூவல் விடுத்திருந்தேன். நான் விடுத்த அறைகூவலை அவர் ஏற்பதாக உறுதி செய்தால், அவர் இப்போது கேட்கும் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக் காட்டிட நான் தயார்! மருத்துவர் ராமதாஸ் நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அறைகூவலை ஏற்று ஆதாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்!

நான் தயாராக இருக்கிறேன்! விவகாரத்தை திசை திருப்பாமல், அவரது வழக்கமான பாணியில் நழுவிடாமல் இந்தமுறை அறைகூவலை ஏற்பார் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: