திருவள்ளூர்: தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் சார்பில், மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி திருநெல்வேலி நகரில் நடந்தது. இதில் ஜூனியர், சூப்பர் சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவில், திருவள்ளூர் மாவட்டம் 79 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்ததுடன், இந்தப் போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும் வென்றது. திருவள்ளூர் மாவட்டம் தொடர்ந்து 8வது முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.