சென்னை: அமிர்தா வித்யாலயம் சார்பில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான 6வது தொகுப்பு கபடி போட்டி சென்னை கலைஞர் நகர் பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்திய கபடி அணியின் முன்னாள் வீரரும், புரோ கபடி அணிகளுடைய முன்னாள் பயிற்சியாளருமான காசிநாதன் பாஸ்கரன் இந்த போட்டியை தொடங்கி வைத்தார்.இப்போட்டியில் 175 பள்ளிகளை சேர்ந்த 181 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் யு17, யு19 பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு என்று தனித்தனியாக 3 நாட்கள் நடந்தன. இப்போட்டியின் 4 இறுதிப் போட்டிகளிலும் அமிர்தா பள்ளிகளே வெற்றிபெற்றன. யு17 மாணவ, மாணவிகள் பிரிவுகளில் கலைஞர் நகர் அமிர்தா வித்யாலயம் பள்ளியும், யு19 மாணவ, மாணவிகள் பிரிவுகளில் நல்லம்பாளையம் அமிர்தா வித்யாலயம் பள்ளியும் வெற்றிபெற்றன.