×

சுயநலம் இல்லாமல் அனைவரும் சேவை புரிந்தால் நாடு முன்னேறும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

சென்னை: அனைவரும் எளிமையாக வாழ்ந்தாலே நாட்டில் ஊழல் என்பது ஒழிந்துவிடும் என ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பின் 20-ம் ஆண்டு விழா நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டில்  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பல்வேறு துறைகளில் மக்கள் சேவையாற்றிவர்களுக்கு சேவா ரத்னா விருது வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், சுயநலம் இல்லாமல் அனைவரும் சேவை புரியும் போது நாடு முன்னேற்றம் அடையும் என்றார். ஒவ்வொரு தனி மனிதனும் எளிமையான வாழ்க்கையை வாழத் துவங்கினால் 2 வருடத்தில் இந்த நாடு  மாற்றம் அடைவதை காண முடியும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் குறிப்பிட்டார். தமிழ் இனிமையான மொழி என்று தமிழில் பேசிய அவர், தான் தமிழை விரும்புவதாகவும் தமிழகம் வந்த முதலே தமிழ்மொழியை கற்க  துவங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

Tags : country ,Panwarilal ,Governor , Country will improve if everyone serves without self-interest: Governor Panwarilal
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...