×

காஞ்சிபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் தே.மு.தி.க பிரமுகர் ஜெயசூர்யா உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் தே.மு.தி.க பிரமுகர் ஜெயசூர்யா உயிரிழந்தார். விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்று விட்டு திரும்பிய போது கார் நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டது. விபத்தில் படுகாயம் அடைந்த ஜெயசூர்யாவின் தந்தை தமிழ்குமரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து அச்சிறுபாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Jayasuriya ,DMK ,road accident ,Kanchipuram Kanchipuram , Kanchipuram, road accident, DMK Prime Minister Jayasurya, death
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி