×

ஹரியானாவில் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி: சமூக வலைதளத்தில் வைரல்

டெல்லி: இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹரியானா மற்றும் மகராஷ்டிரா மாநிலங்களில் வருகிற 21-ம் தேதி (நாளை மறுநாள்) சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று

ஹரியானாவில் உள்ள மகேந்திரகர் என்ற இடத்தில் வாக்கு சேகரித்த அவர், தனது ஹெலிகாப்டரில் அங்கிருந்து டெல்லி திரும்பினார். அப்போது, மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் ரிவாரி என்ற இடத்தில் உள்ள கேஎல்பி கல்லூரி மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்த ராகுல், அவர்களுடன் தானும் இணைந்து கிரிக்கெட் விளையாடினார். ஹரியானாவில், உள்ளூர் இளைஞர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Tags : Rahul Gandhi ,Haryana , Rahul Gandhi playing cricket with youth in Haryana: Viral on social network
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...