விக்கிரவாண்டி, நான்குநேரியில் வாக்காளர்களுக்கு அதிமுக பணம் கொடுப்பதாக திமுக புகார்

சென்னை: இடைத் தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நான்குநேரியில் வாக்காளர்களுக்கு அதிமுக பணம் கொடுப்பதாக திமுக புகார் தெரிவித்துள்ளது. சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் புகார் அளித்துள்ளார். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மூலமாக வாக்காளர்களுக்கு அதிமுக பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்குமாறு தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதி அளித்துள்ளார் என்று கிரிராஜன் பேட்டியளித்துள்ளார்.

Related Stories: