சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை தொடரும் என வானிலை மைய இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், காவிரி டெல்டா மாவட்டங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது நிலவுகிறது என வானிலை மைய இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.