அரசு தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் வலியுறுத்தல்

சென்னை: அரசு தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த மத்திய அரசு வழக்கறிஞர் கருத்தரங்கில் நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசினார். மத்திய அரசு தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க சட்ட ஆணையம் பரிந்துரை செய்தும் செயல்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்தார். மத்திய அரசு தொடர்புடைய 5 லட்சத்து 3450 வழக்குகள் நாடு முழுவதும் நிலுவையில் உள்ளதாக நீதிபதி ராமசுப்பிரமணியன் கூறினார்.

Related Stories: