மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட கட்டணம் செலுத்த வேண்டும்: புதிய முறை அமல்

காஞ்சிபுரம்: மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 40ம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரூ. 600ம் செலுத்தினால் மட்டுமே பார்வையிட முடியும். வெண்ணெய் உருண்டை பாறையை இலவசமாக சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வந்த நிலையில் தற்போது கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. மேலும் கடற்கரை கோயிலை பார்வையிடுவதற்கு மட்டுமே ரூ.40 மற்றும் ரூ.600 முன்பு வசூலிக்கப்பட்டு வந்தது.

Related Stories: