திருச்சி: திருச்சியில் பஞ்சாப் நேசனல் வங்கி, லலிதா ஜுவல்லரி கொள்ளைகளுக்கு பயன்படுத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா வாகனம் போன்ற ஹைடெக் வேனை பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஓட்டுநர் கணேசன் அடையாளம் காட்டிய வேனை ஆய்வாளர் மதன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஓட்டுநர் கணேசனை சமயநல்லூர், வாடிப்பட்டி அழைத்து சென்று விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.