ஷாஜகான்பூர்: முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய சட்ட மாணவி, மேற்படிப்பில் சேருவதற்காக நேற்று விண்ணப்பம் செய்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜ மூத்த தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தாவுக்கு சொந்தமான சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவி, சின்மயானந்தா தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சின்மயானந்தாவை கைது ெசய்து சிறையில் அடைத்தனர். இதேபோல், அவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் சட்ட மாணவியையும் போலீசார் கைது செய்தனர்.